மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… மீன் சாப்பிட்டதும் இதை கண்டிப்பாக சாப்பிட்டுவிடாதீர்கள்?.. இல்லையெனில் அவ்வளவு தானாம்..!

பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடும் போது, அனைவரும் தயிர் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.

ஆனால் அப்படி தயிர் எடுத்துகொள்வது தவறான ஒன்றாகுமாம். செரிமான கோளாறு, தோல் ஒவ்வாமை,நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு போன்ற சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படியென்றால் பிரியாணிக்கு தயிர் பச்சடி தானே காலம் காலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது அதை உண்ணும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லையே என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.

பிரியாணி என்பது தினமும் எடுத்துக்கொள்ளும் உணவல்ல, ஆதலால் நமது உடல் இந்த நிலையில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் சிதைவை சரிசெய்து விடுகிறது.

அதுமட்டுமின்றி பிரியாணிக்கு தயிர் பச்சடி உண்ணும் போது அதனுடன் வெங்காயமும் எடுத்துக்கொள்கிறோம்.

 

இந்த நிலையில் தயிரின் புளிப்பு மற்றும் வெங்காயத்தின் காரம் இரண்டுமே ஈடு செய்யப்படுகிறது. தயிரை காட்டிலும் வெங்காயமே அதிகமாக இடம் பெற்றிருக்கும். இதனால் பெரிய பாதிப்பு இருப்பதில்லை.

ஆனால், மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ளும் போது இரண்டுமே புரோட்டின் என்பதால் தற்காலிக செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் பெரும்பாலும் மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வீட்டு பெரியவர்கள் அறிவுறுத்துவது உண்டு.

எப்போதாவது இப்படி உண்ணும் போதே அஜீரணம் ஏற்படுவதை உணரலாம். அடிக்கடி தொடர்ந்து உண்ணும் போது, பல பாதிப்புகளை ஏற்படுத்துமாம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button