31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

சிலருக்கு திடீரென ஏற்படும் விக்கல் என்ன வைத்தியம் செய்தாலும் நிற்காது. மூச்சை அழுத்திப் பிடிப்பார்கள். தண்ணீர் குடிப்பார்கள். ம்ஹூம். விக்கல் தீராது. மீண்டும் மீண்டும் வந்து உடல் அசந்துவிடும். அப்படிப்பட்ட தீராத விக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் எளிய நிவாரணம் உள்ளது.

சீரகம், திப்பிலி தலா 20 கிராம் எடுத்து அதை நன்றாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

தொடர்ச்சியாக விக்கல் வரும்போது சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் விக்கலுக்குத் தீர்வு கிடைக்கும்.

விக்கலால் தொடர்ச்சியாக அவதிப்படுபவர்கள் கீழாநெல்லிச் செடியின் வேரை எடுத்து வாயில் குதப்பிக் கொண்டால் சிறிதுநேரத்திலேயே விக்கல் நின்றுபோகும்.

அரச மரப்பட்டையைச் சுட்டு அதன் சாம்பலைத் தண்ணீரில் கரைத்து தெளிந்த நீரைக் குடித்தல் விக்கல் பிரச்னை நீங்கும்.
கடுக்காய்த் தோலைப் பொடி செய்து விக்கல் எடுக்கும்போது கால் ஸ்பூன் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

காய்ந்த மல்லி, சோம்பு இரண்டையும் நன்றாக வறுத்து சுடுநீரில் கால் ஸ்பூன் அளவுக்கு போட்டுக் குடித்தால் உடனே விக்கல் ஓடிவிடும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…படுக்கையில் குழந்தைகள் ‘சுச்சு’ போவதை தடுக்க சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள் தெரியுமா.!

nathan

புற்றுநோயும் கூந்தலும்

nathan

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது.

nathan

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

nathan

உங்கள் குழந்தையின் முக்கியத்துவம் நிறைந்த முதல் பிரஷ்

nathan

தெரிஞ்சிக்கங்க…கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆயுர்வேத பரிந்துரைகள்..!!

nathan

ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?..!!

nathan

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சூசி முத்திரை

nathan