3 walk
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…தூக்கம் ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான சில காரணங்கள்!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. உடலுக்கு போதிய ஓய்வான தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல நிம்மதியான தூக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஆரோக்கியமான தூக்கத்தை சரியான நேரத்தில் மேற்கொண்டு வந்தால், மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என இரண்டுமே மேம்படும்.

ஏனெனில் தூக்கத்தின் போது உடலானது மூளையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. அதிலும் குழந்தைகள் மற்றும் டீனேஜ் வயதினர், நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளும் போது, அது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இங்கு ஏன் தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் சரியான நேரத்தில் தூங்கி எழுங்கள்.

ஆரோக்கியமான இதயம்

சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து, அதுவே இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே தினமும் தவறாமல் 7-9 மணிநேரம் தூக்கத்தை மேற்கொண்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக கொள்ளலாம்.

மன அழுத்தம் குறையும்

சரியான தூக்கத்தை மேற்கொள்ளாத போது, மனம் ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.

சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்

நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளும் போது, அது உடலின் ஆற்றலை அதிகரித்து, நம்மை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இப்படி சுறுசுறுப்புடன் இருந்தால், உடல் மற்றும் மனம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

தூங்கும் போது உடல் ஒய்வு எடுக்குமே தவிர, ஆழ்ந்த உறக்கத்தில் நம் மூளை அன்று நடந்த விஷயங்கள், உணர்ச்சிகள், ஒருசில நினைவுகள் போன்றவற்றை சேகரித்து வைக்கும் பணியில் ஈடுபடும். இப்படி ஈடுபடுவதால், நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமானால், நல்ல நிம்மதியான தூக்கத்தை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளுங்கள்.

எடையை குறைக்க உதவும்

ஆய்வு ஒன்றில் தினமும் இரவு நேரத்தில் 7 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பொலிவான முகம்

நிம்மதியான தூக்கத்தை தினமும் மேற்கொண்டு வருவதால், முகம் பொலிவோடு அழகாக காணப்படும். பொதுவாக உடலில் பிரச்சனைகள் இருந்தால், அது முகத்தில் நன்கு வெளிப்படும். இத்தகைய உடல் பிரச்சனைகள் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாததால் அதிகமாகும். ஆனால் தினமும் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொண்டால், முகத்தின் பொலிவு தானாக அதிகரிக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…புதிதாக பெற்றோரானவர்கள் குழந்தை பராமரிப்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

nathan

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஷாக் ஆகாதீங்க…! உடலில் நோய் வரப்போகிறது என்பதை காட்டும் அறிகுறிகள்…

nathan

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! #DailyMotivation

nathan

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கட்டாயமாக கற்றுக் கொடுங்க…!

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன…

nathan