29.8 C
Chennai
Saturday, Jul 26, 2025
gyuyu
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

உங்களுக்கு தெரியுமா கருப்பையில் பனிக்குடம் எதனால் உடைகின்றது.?!

குழந்தையைச் சுற்றி கருப்பையின் உள்ளே அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) ஒரு மெல்லிய சவ்வு போல சூழ்ந்து குழந்தையை பாதுகாக்கின்றது. சில அமுக்க விசைகளில் இருந்தும் இந்த சவ்வானது குழந்தையைப் பாதுகாக்க உதவுகின்றது.

இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) இருக்கின்றது. இந்த மென்சவ்வானது பிரசவம் ஆரம்பித்த பின்னே உடைகின்றது. ஆனால், சிலருக்கு இது அதற்கு முன்பே உடையக்கூடும். இது Pre labour rupture of membrane எனப்படுகின்றது.

இந்த காரணமாக குழந்தையைச் சுற்றி இருக்கும் திரவ நீர் வெளியேறும் அதோடு, கருப்பையின் உள்ளே கிருமிகள் சென்று குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பனிக்குடம் உடைந்ததற்கான அறிகுறிகளாக திடீரென பிறப்புறுப்பு வழியாக திரவம்(நீர் வெளியேறுதல்) வெளியேறும்.
gyuyu
இப்படி திடீரென நீர் வெளியேறினால் அந்த கர்ப்பிணியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆனால், 32 வார கர்ப்ப காலத்திற்கு முன்பே இது நடந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த பெண் 32 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும், அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால் தொப்புள் கோடி கீழிறங்குவது போல் இருந்தாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இந்த நிலைகள் யாருக்கு ஏற்படும் என்பது கணிக்க முடியாது. ஆனால், ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

Related posts

குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள்….

sangika

மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்க….

sangika

தாய்ப்பால், தாய்க்கும், குழந்தைக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும்

nathan

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

உங்களுக்கு தெரியுமா? மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

nathan

எதிர்பாராத விதத்தில் கருத்தரிக்கும் போது நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!

nathan

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

nathan

சூப்பர் ஐடியா.! அழுகிய முட்டையை கண்டறிய..

nathan

4 விதமான யோகாசனம் செய்வதால் நாம் நமது மோசமான மனநிலையை வென்று காட்ட முடியும்:

nathan