30 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவ பரிசோதனைகள்!

இன்றைய பெண்கள் சரியான நேரத்தில் தேவையான சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதின் மூலம் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு ஏற்பட கூடிய நோயை கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கலாம்.

அப்படி பெண்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கீழ்யுள்ள இந்த 10 மருத்துவ பரிசோதனைகளை கட்டயாம் செய்துகொள்ள வேண்டும்.

உடல் எடை சரிபார்ப்பு

ஒருவரின் உயரம், எடை ஆகிய இரண்டையும் வைத்து அவரது பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் உடலின் பிஎம்ஐ கணக்கிடப்பட்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் கொழுப்பு பரிசோதனை

25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவர்களது உடல் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்த பரிசோதனையை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.

ரத்த சோகை பரிசோதனை

உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ரத்தத்தில் பிராணவாயுவின் சுழற்சியை உறுதி செய்யும் ஹீமோகுளோபின் அளவும் குறைந்து ரத்த சோகையை ஏற்படுத்துகின்றன.

ரத்த அழுத்தம் பரிசோதனை

பெண்கள் 18 வயதைக் கடந்த பிறகு குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

வைட்டமின் பற்றாக்குறை சரிபார்ப்பு

கற்பமாக இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடிருப்பது பிரசவத்தின் போது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே பெண்கள் கட்டாயம் வைட்டமின் பற்றாக்குறை பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 45 வயதைக் கடந்த பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நீரிழிவு நோய் இருப்பதை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வழி செய்யும்.

புற்றுநோய் பரிசோதனை

அதிகமாக உடலுறவில் ஈடுபடும் பெண்கள் இந்தப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். 30 வயதைக் கடந்த பெண்கள் கட்டாயம் மார்பக புற்றுநோய் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

எலும்பின் வலிமை சரிபார்ப்பு

எலும்பின் அடர்த்தி குறைவதால் 65 வயதிற்குப் பிறகு பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.இதைப் பரிசோதிக்க டெக்கா ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை

50 வயதைக் கடந்த பெண்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 5 முதல் 10 வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை சிக்மயோடோஸ்கொபி வழியில் செய்துகொள்ள வேண்டும்.

தோல் புற்றுநோய் பரிசோதனை

பெண்கல் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களால் இளம் வயது பெண்களே தோல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தோலின் நிலையைப் பற்றி பரிசோதித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு தோலில் இந்த மாதிரி அறிகுறி இருக்கா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

இத்தனை நாளா இது தெரியாம போச்சே முல்லையில் இவ்வளவு சிறப்பா?

nathan

கருத்தரிப்பது குறித்து மக்களிடையே இருக்கும் சில தவறான கருத்துக்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்தயத்துலயும் இவ்வளவு பக்க விளைவுகளா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

nathan

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan

அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் உங்களுக்குதான் இந்த விஷயம் நீங்கள்

nathan