30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அறுசுவைசைவம்

பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள் :

ராஜ்மா  – ஒன்றரை கப்,
பன்னீர் – 150 கிராம்,
வெங்காயம் – 2 (நடுத்தரமான அளவில்),
தக்காளி – 2,
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன்,
மஞ்சள் போடி – அரை டீஸ்பூன்,
மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன்,
மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்,
சீரகப்பொடி – அரை டீஸ்பூன்,
கரம் மசாலா – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

Related posts

பனீர் பிரியாணி

nathan

வெள்ளரிக்காய் தால்

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

சீரக சாதம்

nathan

சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி

nathan

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

nathan

இறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை!!!

nathan

இறால் தொக்கு

nathan