30 C
Chennai
Saturday, Jul 11, 2026
தலைமுடி சிகிச்சை

கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது

அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் இந்த கற்றாழைக்கு உள்ளது.  இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். நேச்சுரல் கண்டிஷனர்: கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.

கூந்தலுக்கு ஊட்டச்சத்து: தொடர்ந்து கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது.ஈரப்பதம் : கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாைழயில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அளவு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.கூந்தல் வெடிப்பு: காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்துபாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.

நோய் கிருமி தாக்குவதை தடுக்கும்: தற்போது நவீனம் என்ற பெயரில் கூந்தலை வெவ்வேறு வண்ணங்களில் கலரிங் செய்து கொள்கிறோம். இதனால் தலையை ரசாயனம் மற்றும் நோய்கிருமிகள் தாக்குகின்றன. ஆனால் கற்றாழை ஜெல்லை கூந்தலின் வேர்க்கால்களில் தடவி வந்தால் நோய் கிருமி தாக்குதலில் இருந்து கூந்தலை தப்புவிக்கலாம். பொடுகு:  வறண்ட சருமம், பூஞ்சை தொற்று, அரிப்பு, எண்ணெய் சருமம் உள்ளிட்டவற்றுக்கு கற்றாழை ஜெல் நல்ல மருந்தாக பயன்படுகின்றது. பொடுகு மற்றும் அரிப்பில் இருந்து காக்கும் கவசதொப்பியாக இந்த ஜெல் உள்ளது. முடி உதிர்வு:  கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது.

* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து தலைக்கு தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் மயிர்கால்கள் வலிமையடையும்.
* கற்றாழையை தொடர்ந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளக்கும்.

Related posts

கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan

podugu poga tips in tamil – பொடுகு நீங்க சிறந்த வழிகள்

nathan

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் கூறும் தகவல்கள்

nathan

ஆண்களே! தலைமுடி அதிகம் கொட்டி சொட்டை விழுவது போல் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan

2 நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் 3 அதிசய பொருட்கள்!

nathan

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!

nathan

கொட்டும் தலைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க…

nathan