201703211225461034 Symptoms that suggest lung cancer in women SECVPF 1
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்

பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிபடுத்தும் அறிகுறிகளாகும்.

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், நுரையீரலின் வெளிபுறத்தில் இது உருவாவதால் மற்ற பாகங்களான எலும்பு, கல்லீரல் போன்றவற்றிற்கு எளிதில் பரவக்கூடும்.

எனவே, பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும். ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.

நுரையீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக நரம்புகளை பாதிக்கும். அதனால் தான் முதுகு மற்றும் தோள்பட்டையில் பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி வளர்ந்தால் நம் சுவாச சுழற்சியில் தடை ஏற்படும். இதனால் கூடத் தொடர்ச்சியான இருமல் ஏற்படும், கவனித்துக் கொள்ளுங்கள்.

நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நெஞ்சு வலியில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஏனெனில், இந்த புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.

நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறி தான் இந்த கரகரப்பான குரல். எப்பொழுது நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி உருவாகிறதோ அது குரலில் ஒரு கரகரப்பு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது மூச்சு விடும் போது கூட கடுமையான சத்தத்தை ஏற்படுத்தும்.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி ஏற்படுவதால் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நுரையீரலில் சளி அதிக அளவில் தேங்கும். மேலும், இது புற்றுநோய் கட்டியில் இருந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். அந்த இரத்தம் எச்சில் வழியாக வெளியேறக்கூடும்.

இவையெல்லாம் தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.201703211225461034 Symptoms that suggest lung cancer in women SECVPF

Related posts

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

nathan

உங்களுக்கு இரவு நேரங்களில் பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா? அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்கள் நோய்களை குணமாக்கும் மலர் சிகிச்சை கேள்விப்பட்டிருக்கீங்களா? இதப் படிங்க!!

nathan

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்…!!

nathan

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால்.. இந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்..!

nathan

வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

அதென்ன பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்

nathan