32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும்.

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ந்தேதி வரையும், பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 31-ந் தேதி வரையும் நடக்கிறது. அரசு பொதுத்தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ந்தேதியும்,10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

இதுவரை படிக்காமல் இருந்து விட்டோம். இனிமேல் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியுமா? என்று எந்த நிலையிலும் கருதி விடக்கூடாது. நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பதற்றத்துடனும், பயத்துடனும் இருப்பது தேர்வை நல்லபடியாக எழுதுவதற்கு எந்த வகையிலும் உதவாது. முடிந்த வரை பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் பாடம் தொடர்பாக தங்களுக்குள் விவாதித்து நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தேர்வுக்காலத்தின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்பட வேண்டும். கடந்து போன காலத்தை மறந்து, தற்போது கிடைக்கும் நேரத்தை சரியாகவும், முழுமையாகவும் படிப்புக்காக செலவிட வேண்டும். அதிலும் தனக்கு சரியாக படிக்க வராத பாடத்தையும், நன்றாக படிக்க வரும் பாடத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் கூறப்படும் கருத்துகளை பொருட்படுத்த கூடாது. ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும் அடுத்த தேர்வுக்கு உடனே தயாராகி விட வேண்டும். எழுதி முடித்த தேர்வுகளில் செய்து விட்ட தவறுகளை நினைத்து சோர்ந்து விடக் கூடாது. தவம் இருப்பது போல் தேர்வுக் காலத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமர்ந்து படிக்க வேண்டும். அதன் மூலம் தான் எதிர்காலத்தில் உயர்ந்த இடத்தில் அமரும் நிலைக்கு உயர முடியும்.

தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதில் கவனம் செலுத்தி திசைமாறி விடக்கூடாது. படிக்காமல் விட்ட கடந்த காலத்தை மறந்து விட்டு,

தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும்.

மேலும் உயர்கல்வியிலும் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றாக படிக்கிற மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண் பெற படிக்க வேண்டும். இதன் மூலம் அறிவார்ந்த மாணவ சமூகத்தை பெற முடியும்.

Related posts

சருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ!

nathan

‘வைரஸ் காய்ச்சல்’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

nathan

இளம் பருவத்தில் உண்டாகக் கூடிய சாதாரண அறிகுறிகள்தான்…. ஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..?

nathan

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

nathan

மலச்சிக்கலால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்கவல்ல பொன்னாங்கண்ணி கீரை

nathan

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan

தெரிஞ்சிக்கங்க… பூண்டு மற்றும் தேனை உட்கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் அற்புதமான பயன்கள்

nathan