31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கார்ர பெண்டலம் பிட்டு

என்னென்ன தேவை?

மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
தேங்காய் – 1
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதைத் துருவி, அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் அதைப் பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில்போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு, புட்டு செய்வதற்கான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வையுங்கள். பின்பு, புட்டு குழலை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிதளவு துருவிய தேங்காய், பின் சிறிதளவு துருவிய மரவள்ளிக் கிழங்கை அடுத்தடுத்துப் போட்டுக் குழலை நிரப்புங்கள். பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, வேகவைத்து இறக்கினால், கார்ர பெண்டலம் பிட்டு ரெடி.

Related posts

கம்பு உப்புமா

nathan

ஒப்புட்டு

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

nathan

சப்பாத்தி – தால்

nathan