32.4 C
Chennai
Tuesday, Sep 2, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

3-Amazing-Clay-Face-Masks-For-Oily-Skin1. இளமையாக வைக்கும் மண்ணால் செய்த மாஸ்க்:
 
 
உங்களை இளமையாகவும் பொலிவான மென்மையாகவும் வைக்க உதவும் மண்ணால் செய்த மாஸ்க்குகளை செய்ய கடல் களிமண், கிரீன் டீ, தண்ணீர், எலுமிச்சை, மற்றும் முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை தயாராக வைத்து கொள்ளுங்கள். இப்போது இவற்றை பயன்படுத்தி மாஸ்க்கை செய்யும் முறையை பார்ப்போம்.


 
தயார் செய்யும் முறை:
 
ஒரு கிண்ணத்தில் கடல் களிமண் (பிரஞ்சு பச்சை களிமண்) சுமார் 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள் சேர்க்கவும், பிறகு
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை பன்னீருடன் சேர்த்து நான்கு அடித்து வைத்து கொள்ளவும்
அதனுடன் பசும் தேநீர் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள்.
முகத்தை கழுவிய பின்னர், முகம் மற்றும் கழுத்தில் மாஸ்கை தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு
பிறகு, மீதமான சூடு உள்ள தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
பசும் தேநீர் மற்றும் கடல் களிமண் எண்ணெய் ஆகியவை தோளின் மீது படிந்து உள்ள அழுக்கை அகற்ற பயன் படுகிறது. கடல் களிமண் முகத்திலுள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்க பயன் படுகிறது. மற்றும் முட்டையின் வெள்ளை கரு, உங்கள் தோலை இறுக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. எலுமிச்சை உங்கள் சருமத்தில் உள்ள நிறத்தைக் அளிக்கிறது. இந்த மாஸ்க்கை, வாரம் ஒரு முறை பயன்படுத்தினால், உங்கள் முகம் பொலிவுறும்.
 
2. அழகை தரும் சேற்று மாஸ்க்:
 
பெந்‌டநைட் அதாவது பச்சை களிமண் நமது ஸருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் கட்டுப்பத்துகிறது. உங்களுக்குள் மறைந்துள்ள அழகை வெளிப்படுத்த வேண்டுமெனில், தேன் (எண்ணெய் தோல் உள்ளவர்களுக்கு) பன்னீர் (உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, பெண்ட்டோனைட், பால் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
 
தயார் செய்யும் முறை:
 
2 பிசைந்த ஸ்ட்ராபெர்ரி, 2 பிசைந்த வெள்ளரி துண்டுகள் மற்றும் 3/4 டீஸ்பூன் பெண்ட்டோனைட் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட்டாக நன்கு அடித்து கிளருங்கள்.
பிறகு அதனுடன் அரை தேக்கரண்டி பால்/பன்னீர் மற்றும் தேன் 3 லிருந்து 4 சொட்டு வரை சேர்த்து கிளருங்கள்.
 
பயன் படுத்தும் முறை:
 
முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலர விட்டு,
மீதமான சூடு உள்ள தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
நல்ல பலனை பெற வாரத்திற்கு இருமுறை இந்த மாஸ்க்கை பயன் படுதுங்கள்.
 
3. உலர்ந்த சருமத்திற்கான, சருமத்தை மிருதுவாக வைக்க உதவும் சேற்று மாஸ்க்:
 
தோல் வறட்சியை குணப்படுத்த மஞ்சள் பிரஞ்சு களிமண் உடன் நீர், பால் மற்றும் தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.
 
தயார் செய்யும் முற

1/4 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மஞ்சள் பிரஞ்சு களிமண் கலந்து
அதனுடன் தேன் 3 லிருந்து 4 சொட்டு வரை சேர்த்து நன்றாக கலந்த பேஸ்ட் உடன்
தேவைக்கு ஏற்ப பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
 
பயன்படுத்தும் முறை:
 
முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர விட்டு
மீதமான சூடு உள்ள தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

மஞ்சள் பிரஞ்சு களிமண் சருமத்தை மிருதுவாக வைப்பதனுடன் முகத்திலுள்ள திட்டு, ஸரும வறட்சி, வெடிப்பு சரி செய்ய வல்லது. நீண்ட கால பலனை பெற ஒரு வாரதிற்க்கு மூன்றுமுறை இதனை பயன்படுத்துங்கள்.

Related posts

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..?

sangika

கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க இத டிரை பண்ணுங்க…

nathan

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

சருமத்தின் மீது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்ல பலனை அளிக்க இத செய்யுங்கள்!…

sangika

மகளீர் தினத்தில் டிடி சொன்ன குட்டி ஸ்டோரி! 36 வயது-டைவோர்ஸ்… வீடியோ இதோ

nathan

ஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய

nathan