27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
mAHcfpw
மருத்துவ குறிப்பு

நோய் நீக்கும் துளசிமாலை

துளசிதீர்த்தம் அமிர்தத்திற்கு நிகரானது. துளசிமாலையைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. இதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசிமணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளை குணப்படுத்துகிறது. வீடுகட்டும்போது வாயிற்படியில் மஞ்சளில் நனைத்த துணியில் துளசியைக் கட்டிவைக்கும் பழக்கம் இன்றும் உண்டு.

இடிதாங்கியைப்போன்ற சக்தி இதற்கு உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது. துளசிச் செடி பூவிட்டு வருகையில் கவனமாக பூவும், விதையும் முற்றிப் போவதற்கு முன் கொத்துக் கொத்தாக உள்ள பூவைக் கொய்து விட வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் நீண்ட நாட்களுக்கு துளசிச் செடி பட்டுப்போகாமல் பலன் தரும். பண்டைய காலத்தில் யுத்தத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் வெற்றி கிடைப்பதற்காககத் துளசி மாலையை அணிந்து சென்றுள்ளனர்.

வீர சாகசம் புரியும் வீரர்களுக்கு துளசிமாலையைப் பரிசாக அளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இறந்தோர் உடலை துளசியின் மீது படுக்க வைத்து துளசியால் மூடி வைத்தால் ஒருவார காலம் வரை கெடாமலும், துர்நாற்றம் வீசாமலும் பாதுகாக்கும். துளசி மனித குலத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான மூலிகை ஆகும்.mAHcfpw

Related posts

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கான 9 விஷயங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த விஷயங்களை முதல்ல கைவிடுங்க.. இல்லன்னா உங்க சிறுநீரகம் அழுகிடும்….

nathan

மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

nathan

வறட்டு இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

nathan

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

nathan

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு

nathan

கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்

nathan

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

nathan