29.4 C
Chennai
Monday, Jul 20, 2026
மருத்துவ குறிப்பு

நோய் நீக்கும் துளசிமாலை

துளசிதீர்த்தம் அமிர்தத்திற்கு நிகரானது. துளசிமாலையைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. இதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசிமணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளை குணப்படுத்துகிறது. வீடுகட்டும்போது வாயிற்படியில் மஞ்சளில் நனைத்த துணியில் துளசியைக் கட்டிவைக்கும் பழக்கம் இன்றும் உண்டு.

இடிதாங்கியைப்போன்ற சக்தி இதற்கு உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது. துளசிச் செடி பூவிட்டு வருகையில் கவனமாக பூவும், விதையும் முற்றிப் போவதற்கு முன் கொத்துக் கொத்தாக உள்ள பூவைக் கொய்து விட வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் நீண்ட நாட்களுக்கு துளசிச் செடி பட்டுப்போகாமல் பலன் தரும். பண்டைய காலத்தில் யுத்தத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் வெற்றி கிடைப்பதற்காககத் துளசி மாலையை அணிந்து சென்றுள்ளனர்.

வீர சாகசம் புரியும் வீரர்களுக்கு துளசிமாலையைப் பரிசாக அளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இறந்தோர் உடலை துளசியின் மீது படுக்க வைத்து துளசியால் மூடி வைத்தால் ஒருவார காலம் வரை கெடாமலும், துர்நாற்றம் வீசாமலும் பாதுகாக்கும். துளசி மனித குலத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான மூலிகை ஆகும்.

Related posts

செரிமான கோளாறுகளை சரிசெய்யும் அன்னாசிப் பூ

nathan

கல்லீரலில் பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? 40 வயதை நெருங்கும் பெண்களுக்கு அவசியமான பரிசோதனைகள்

nathan

சர்க்கரை வியாதி இல்லாமலே அடிக்கடி சிறுநீர் வருதா?… வீட்டு வைத்தியம்

nathan

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பை வருவதற்கு இவை தான் காரணம்

nathan

அதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்?!

nathan