அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து அதிபர் டிரம்ப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அந்த வகையில் ஆண், பெண் என இரு பாலினத்தவர்களும் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். இதற்கிடையில், திருநங்கைகள் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது:
இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிவுக்கு வந்தது. ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. பெண்கள் விளையாட்டுகளின் பெருமைமிக்க மரபுகளை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். ஆண்கள் பெண்களை அடிப்பதையோ, காயப்படுத்துவதையோ அல்லது ஏமாற்றுவதையோ நாங்கள் மன்னிப்பதில்லை. பெண்களுக்கான விளையாட்டுக்கள் இப்போது பெண்களுக்கானவை என்று அவர் கூறினார்.
ஆணாகப் பிறந்த திருநங்கைகள் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதன் மூலம் திருநங்கைகள் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை அதிபர் டிரம்ப் அனுப்பியுள்ளார்.