கடலை பருப்பு
காய்ந்த, பச்சை மிளகாய்
இஞ்சி, பூண்டு
கறிவேப்பிலை
சோம்பு
பெருங்காயம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு 1-2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பின் தண்ணீரை வடித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட் உடன் 1 வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காயை வைக்கவும். இடையில் மசாலா கலவை உருட்டி, தட்டி எண்ணெய் போட்டு பொறித்து எடுத்தல் அருமையான மசாலா வடை ரெடி.