30.4 C
Chennai
Thursday, May 22, 2025
aa45
Other News

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே காரைமேடு வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கும், செந்தூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ரமணா (23) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தரணி என்ற நான்கு வயதில் மகளும், ஹரிபிரசாத் என்ற இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில், ரமணா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ரமணாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.aa45

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இறந்த பெண் குழந்தையை வயிற்றில் இருந்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் ஒடியர்பாளையம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்த ராசி ஆண்கள் மனைவியை படாதபாடு படுத்தும் மோசமான கணவராக இருப்பார்களாம்…

nathan

புதிதாக வாங்கும் பொருட்களில் உள்ள இந்த “குட்டி பாக்கெட்” எதற்காக தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இதை நீங்களே பாருங்க.! இருட்டு அறையில் முரட்டு குத்து-2.. வாழைப்பழத்தை வைத்து படுமோசமாக வெளியான போஸ்டர்

nathan

வாட்ச்மேன் முதல் ஐ.ஐ.எம் பேராசிரியர் வரை:தன்னம்பிக்கைக் கதை!

nathan

ரம்யா பாண்டியன் தங்கை திரிபுர சுந்தரியின் பிறந்தநாள்

nathan

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எத்தனை ஆயிரம் ஏலத்தில் விற்கப்பட்டது தெரியுமா?

nathan

Find Out Your Star Birthdate by Using a Star Birthday Finder

nathan

70-வது பிறந்தநாள் விழாவில் மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு உலக அமைதி, பாதுகாப்பு விருது

nathan

‘எனக்கு விஜயை பிடிக்கும்; அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும்’

nathan