28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

மாடர்ன் உடையில் லொஸ்லியாவின் அம்மா…

nathan

பிக்பாஸிற்கு ஓடர் போட்ட மாயா.. திணறிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ

nathan

நிறை மாதத்தில் டான்ஸ் ஆடிய அமலாபால்

nathan

Kylie Jenner and Travis Scott Take a Baby Duty Break With Miami Getaway

nathan

இலங்கை பிடித்துள்ள இடம்! உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்:

nathan

அப்பாவாக போவதை அறிவித்த பிக் பாஸ் ஷாரீக்

nathan

இந்திய நடிகருக்கு தபால் தலை -கௌரவித்த அவுஸ்திரேலியா!

nathan

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

nathan

ஒரு நாளைக்கு 73 லட்சம் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி!

nathan