32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

பொறுமை சோதிக்கும் முதல் பாதி.. ஆனால்..! – “லியோ” படம் விமர்சனம்..!

nathan

கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு

nathan

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா

nathan

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

nathan

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம்

nathan

முகூர்த்த நாட்கள் 2025

nathan

ஆட்டோவில் சென்ற நடிகை சமந்தா -ஒரு வீடியோவை வெளியிட்டார்,

nathan

ஜெர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு செலவாகும்?

nathan

அடிபட்டு படுத்த படுக்கையாக இருக்கும் விஜய் டிவி மணிமேகலை!

nathan