30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

BISON படப்பிடிப்பை தொடங்கி வைத்த நடிகர் விக்ரம்

nathan

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய சாந்தனு

nathan

நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 14 வயதுச் சிறுவன்..

nathan

மனித பூனையாக உருமாறிய இளம்பெண்!!

nathan

நடிகர் புகழ் மகளின் தொட்டில் விழா..

nathan

பாம்பு கடி – தன் தாயை விஷத்தை உறிஞ்சி எடுத்து காப்பாற்றிய மகள்

nathan

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்

nathan

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை -நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது

nathan

விமானியைக் கோபத்தில் தாக்கிய பயணி.. வைரல் வீடியோ!

nathan