29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

‘புல்லட் மெக்கானிக்’ -கேரள கல்லூரி மாணவி!

nathan

11 கிலோ தங்க நகைகள் – கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் சாமியார்கள்!!

nathan

ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை

nathan

காந்த புயல்கள்.. அலெர்ட் செய்யும் விஞ்ஞானிகள்.. பூமியில் என்ன நடக்கிறது தெரியுமா?

nathan

கர்ப்பமான 16 வயது சிறுமி… தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் போக்ஸோவில்

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்!

nathan

எல்லை மீறும் வாக்குவாதம்.. பிரதீப்- நடந்தது என்ன?

nathan

முன்னழகை அப்பட்டமாக காட்டும் எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்

nathan