30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

கோடையின் வெம்மை உஷ்ண உபாதைகள்… விரட்டும் உபாயங்கள்!

வைத்தியம்
இனி வரும் நாட்களில் கோடையின் வெம்மை நம்மை கடுமையாக தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அதற்கு முன்னதாக நம்மை தற்காத்துக்கொள்வது பற்றி தெரிந்துகொள்வோம். தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து நீர்மோருடன் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெயிலினால் ஏற்படும் களைப்பு, சோர்வு நீங்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை, கசகசாவை மையாக அரைத்து கொதிக்க வைத்த பால், சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், உஷ்ண நோய்கள் நம்மை நெருங்காது. மோருடன் சிறிது வெந்தயம் சேர்த்து முதல்நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் குடித்து வந்தால் உடல்சூடு குறையும். அத்துடன் வெயிலினால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். எலுமிச்சைச் சாறுடன் மோர் சேர்த்து வெங்காயச்சாறு, பெருங்காயம், உப்பு சேர்த்து குடித்து வந்தால் வெயிலினால் ஏற்படும் அசதி, சூடு குறையும்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயிலை சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல்சூடு குறையும். இவை தவிர, கோடை வரவுகளான வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, நுங்கு போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அம்மை, கண் நோய், வயிற்று வலி, மூத்திரக்கடுப்பு போன்ற நோய்கள் நம்மை தாக்காது.

Related posts

பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை

nathan

உஷாரா இருங் நீங்க மூச்சு விடும்போது இந்த வாசனை வந்தா உங்கள் சிறுநீரகம் ஆபத்துல இருக்குனு அர்த்தம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பிணிகளின் பழக்கங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

nathan

உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

எடை குறைப்புக்கு உதவும் வேப்பம்பூ – தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்

nathan

டீன்-ஏஜ் பெண்கள் நாப்கின் மாற்றுவது பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்ன?

nathan