28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
beauty dangerous 003
கண்கள் பராமரிப்பு

வசீகரிக்கும் கண்களுக்கு

கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் அதற்கான சில ஆலோசனைகள். கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும்.

இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும். சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும்.

பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும். வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
beauty dangerous 003

Related posts

அழகிய கண்களை பெறுவது எப்படி ?

nathan

கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?

nathan

கருவளையம் போக்கும் கைமருந்து

nathan

கருவளையம் போக்கும் தெரப்பி

nathan

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

nathan

கண்களை சுற்றியுள்ள சருமத்தை எப்படி பராமரிக்கலாம் எனத் தெரியுமா?

nathan

கண்களுக்கு ரோஸ் வாட்டர் தரும் புத்துணர்ச்சி,tamil new beauty tips

nathan

கருவளையம் நீங்க இத செய்யுங்கள்!…

sangika

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan