29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

மார்பகம், கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜிப்மர் பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு இணைப் பேராசிரியை ஏ.ஆனந்தி தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் நல்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் பெண்களிடம் காணப்படும் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோயை ஆரம்பக் கட்டத்தில் கண்டறியும் முறைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக் கழக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்குப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வையும் அதன் அறிகுறிகளையும், விளைவுகளையும், சிகிச்சை முறைகளையும் மற்றும் நோய் கண்டறிதலையும் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

பொதுஅறுவைச் சிகிச்சை துறை இணைப் பேராசிரியை ஏ.ஆனந்தி, மாதர் நோய், மகப்பேறு மருத்துவத்துறை உதவிப் பேராசிரியை ஜெயலட்சுமி, இயன்முறை மருத்துவர் ஆர்.சலஜா, ஆகியோர் பொதுமக்கள், பெண்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து நோயை கண்டறிதல் குறித்து விவரித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சமூக மருதுத்துவ சேவைப் பிரிவு பிரம்சிலூகாஸ், வி.சித்ரகலா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

nathan

தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்க உதவும் ஆரோக்கிய உணவுகள் !!

nathan

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற

nathan

உங்க பற்களில் இரத்த கசிவு மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

nathan

ஏலக்காய் வாசனைக்கு மட்டுமல்ல உடலிற்கும் எண்ணற்ற நன்மை பயக்க வல்லது…!

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி?

nathan

குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உப்புசத்தால் உண்டாகும் பிரச்னைகள்!…

sangika