29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

மூக்கடைப்பிற்க்கான சித்த மருந்து

1 . வேம்பு
வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும்.
எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக்
கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து
ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள்
தீரும்.

வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம்,
கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில்
அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி
நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்

Related posts

40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்! சூப்பர் டிப்ஸ்…

nathan

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்

nathan

உஷரா இருங்க…! இந்த கீரையை அதிகமா சாப்பிட்டா… சிறுநீரக கல் ஏற்படும்மா?…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பி.சி.ஓ.டி. பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்

nathan

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற

nathan

காலையில் இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோயை தடுக்கலாம் என தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..தெரிந்துகொள்வோமா?

nathan