33.7 C
Chennai
Saturday, Oct 5, 2024
Tamil News large 1457115
பெண்கள் மருத்துவம்

40 வயதை கடந்த பெண்களுக்கு மூட்டுவலி வாய்ப்பு;மனதை தளர்வாக வைத்துக் கொள்வது அவசியம்

மதுரை;’அதிக கவலைப்படும் மற்றும் 40 வயதை கடந்த பெண்களுக்கும் மூட்டுவலி, எலும்பு தேய்மான பிரச்னைகள் வரலாம்,’ என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.குடும்பம், குழந்தைகள் என கவலைப்பட்டு, தங்களை கவனிக்காத பெண்களுக்கு மூட்டுவலி வரலாம். கவலைகள் அதிகமாகும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; சிறுநீரகம் பாதிக்கப்படும். இதற்கு மனதை தளர்வாக வைத்துக் கொள்வது அவசியம் என்கிறார், மதுரை சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சுப்ரமணியன்.

அவர் மேலும் கூறியதாவது: உணவில் உப்பு, புளிப்புத் தன்மை அதிகம் பயன்படுத்தினால் கை, கால் கணுப் பகுதிகளில் வீக்கமும், வலியும் ஏற்படும். புளிக்காத தயிர் சாப்பிடலாம். மற்ற புளிப்பு உணவுகளை சேர்க்கக் கூடாது. நீண்டநாட்களாக வலியிருந்தால் பாக்டீரியா, வைரஸ்கள் மூலம் நோய்கள் பரவியிருக்கலாம். மூட்டில் அடிபடுவதால் கூட தொற்று ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம்.

கை, கால் பெரிய மூட்டுகளில் மட்டும் வலி வருவது ஒரு வகை. இருதயத்துடன் தொடர்புடைய
மூட்டுவாதத்தில் நெஞ்சுவலி வரும். இருதயதுடிப்பு அதிகம் காணப்படும். மூட்டில் காசநோய் இருந்தால் பாதிப்பை உண்டாக்கும்.நாற்பது வயதை கடந்த ‘மெனோபாஸ்’ நிலையில் உள்ள பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரும். மூட்டுவாதம், வலிக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய சித்தா துறையில் நல்ல மருந்துகள், உள்ளன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க காலை, இரவு வெறும் வயிற்றில் தலா 2 கிராம் சீந்தில் சூரணத்தை வெந்நீரில் கலந்து அருந்தலாம். இம்மருந்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. சீரகத்தை வறுத்து கொதிக்க வைத்த குடிநீரில் சேர்த்து குடிக்க வேண்டும், என்றார்.
Tamil News large 1457115

Related posts

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்

nathan

ஹார்மோன் கோளாறு ஆகும். பி.சி.ஓ.எஸ் கொண்ட பெண்களுக்கு கொரோனா தொற்று எளிதில் தாக்க அதிக வாய்ப்பு…

nathan

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான 5 காரணங்கள்

nathan

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?

nathan

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தடைக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை – வந்துவிட்டது கருத்தடை ஆபரணம்!

nathan

பெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை

nathan

ஏன் தெரியுமா? குறிப்பாக பருவபெண்களுக்கு பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது

nathan

பெண் மலடு கிடையாது

nathan