29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன.

அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது.

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் சிறுது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.

இது போட்டதுமே உடனடியாக முடி நீங்கி விடாது. நாளடைவில் தான் போகும்; ஆனால்,

புதிதாக முடிகளை வளரவிடாது. ஏதாவது லோஷன் போட்டு, இந்த அனாவசிய முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் பவுடரை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம

அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும்.

Related posts

அழகான கருமையான புருவங்கள் வேண்டுமா ? அப்ப இத படிங்க!!

nathan

இயற்கையான மேக்கப் சாதனங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

nathan

ஜொலிக்கும் சருமத்தை பெற ‘இந்த’ எண்ணெயில் நீங்களே தயாரிக்கும் ஃபேஸ் பேக்கை யூஸ் பண்ணுங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி…?

nathan

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

பொலிவான முகம் வேண்டுமா? இந்த மாஸ்க்கை வாரம் 2 முறை போடுங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் உப்பு தண்ணிய வெச்சு இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்?

nathan

சிவப்பழகு ஸ்க்ரப் -தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் தோலை அழகுக்காக இப்படி யூஸ் பண்ணலாமா!

nathan