30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பெண்கள் மருத்துவம்

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?

பொ துவாக, குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின், தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்திற்கு போதாது. குழந்தைகளுக்கு பசி அதிகமாக இருக்கும். குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், பிரசவம் முடிந்து, மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற திரவ உணவுகளையும் கொடுத்துப் பழக்குங்கள். இதனால், குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்த்து இருக்காது. ஆறு மாதங்களுக்குப் பின், திட உணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின், ஒன்றரை வயதிற்குள், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

குழந்தைக்கு பற்கள் முளைக்க துவங்கினால், தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க ஆரம்பிப்பர்; அப்படி செய்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதில் ஒருவித வெறுப்புணர்வு ஏற்படும். அப்படி நீங்கள் உணர ஆரம்பித்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடலாம். தாய்மார்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

Related posts

மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்..!தெரிந்துகொள்வோமா?

nathan

நச்சுக்கொடி பிரிதல் -ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது

nathan

பெண்களுக்கு எப்போது இறுதி மாதவிடாய் தொடங்குகிறது

nathan

கருப்பை நீர்கட்டிகளை இல்லாது ஒழிக்க இதை செய்யுங்கள்!….

sangika

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

nathan

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை

nathan

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கால பிரச்சினைகளுக்கு இது சிறந்ததாம்!…

sangika

கர்ப்பம் தரிக்காமைக்கான முக்கிய காரணி…

sangika

முடிந்த வரை கருப்பையை அகற்றாதீர்கள் !!

nathan