2
பெண்கள் மருத்துவம்

தாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ் நோயை கட்டுப்படுத்த–ஹெல்த் ஸ்பெஷல்

பூப்படைந்து சில வருடங்கள் ஆனதும் `ஸ்கேன்’ செய்து பார்க்க வேண்டும். பார்த்தால், சினைப்பையில் கட்டிகள் இருந்தால் தெரிந்து விடும். 30 சதவீதம் பெண்களுக்கு கட்டிகள் இருக்கலாம். ரத்தப்பரிசோதனை மூலம் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், புரலாக்டின் போன்றவைகளின் தன்மையை ஆராய்ந்து விடலாம்.

ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் பரிசோதனை மூலம் பாதிப்பை முழுமையாக கண்டறிந்து விடலாம். பி.சி.ஓ.எஸ். குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், தொடக்கத்திலே இதன் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை பெறவேண்டும்.

பெரும்பாலான பெண்கள் திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்பும் தாய்மையடையாமல் இருந்தால் மட்டுமே, பி.சி.ஓ.எஸ். பரிசோதனைக்கு உட்படுகிறார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த நான்கு விதமான முக்கிய நடவடிக்கைகள் தேவை. அவை:

* அறிகுறிகளை கண்டறிதல்.

* பரிசோதித்து முறையான, முழுமையான சிகிச்சை பெறுதல்.

* சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்.

* உடற்பயிற்சி செய்தல். பெண்கள் விழிப்புடன் இருந்தால் இந்த நோயை தவிர்க்கலாம். வந்தாலும் நவீன சிகிச்சை மூலம் தடுக்கலாம்.

– டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.
2

Related posts

பெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை

nathan

கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை

nathan

இன்றே மேற்கொள்ளுங்கள்.!! குழந்தையின்மை பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

nathan

பெண்கள் அறிய வேண்டிய அழகின் இரகசியங்கள்

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்

nathan

குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

nathan

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

nathan

பெண்களே அவதானம் உங்களுக்கு இவ்வாறான அறிகுறி உண்டா?

sangika