32.8 C
Chennai
Wednesday, May 28, 2025
unna
Other News

இந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டம்….

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அந்த வகையில் இன்று 9 எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் குறித்து பார்க்கலாம். 9,18,27 ஆகிய எண்களின் கீழ் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்காரர்கள் ஆவர்.

இவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். இவர்களுக்கு சட்டென்று கோபம் தலை தூக்கும்.

வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டைக்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களுடன் சண்டை இடுவது இவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கும். பல அபூர்வ திறமைகளை உள்ளவர்கள் இவர்கள்.

சகிப்புத் தன்மை அற்றவர்கள். இவர்கள் தோல்வி வந்தாலும், வெற்றி வந்தாலும் பெரிதாக அதை பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள். துணிச்சல் அதிகம் கொண்டவர்கள்.

மற்றவர்கள் இவர்களுக்கு நல்லது செய்தாலும், கேட்டது செய்தாலும் எளிதில் மறக்க மாட்டார்கள். சமயம் பார்த்துப் பழிவாங்கக் காத்திருப்பார்கள். அதனால் இவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் என்று கூறுவார்கள்.

இவர்கள் கையில் யாருடைய பணமாவது இருந்து கொண்டே இருக்கும். மற்ற எண்களில் பிறந்தவர்கள் இயற்கையைக் கண்டால் ரசிப்பார்கள்.

ஆனால், இவர்கள் இயற்கை எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தால் தான் இயற்கை அழகாக உள்ளது என்று கூறுவார்கள். இவர்களுக்கு நெருப்பு தான் அழகாகத் தெரியும்.

ஆகவே தான், இந்த எண்ணில் பிறந்த பலர் சிறந்த தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் திகழ்கிறார்கள். பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவார்களை திருமணம் செய்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

   9 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் இந்த மாத பலன்கள்

  1. உங்கள் திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணுவீர்கள்.
  2. இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
  3. எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும்.
  4. பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
  5. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
  6. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.
  7. குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  8. அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
  9. எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

Related posts

அடேங்கப்பா! நடிகை நதியாவில் முதல் கணவர் யார் தெரியுமா இரண்டு மகள்களின் அப்பா இவர் தானா!!

nathan

யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார்

nathan

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா..

nathan

வரம்பு மீறிய கவர்ச்சியில் ரெஜினா..! – புலம்பும் ரசிகர்கள்..!

nathan

தனி ஒருவன் 2 அரவிந்த்சாமி கதாபாத்திரத்தின் வில்லனே ஒரு பிரபல ஹீரோ தான்

nathan

தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி

nathan

வடிவேலு பற்றி முதன்முறையாக பேசிய விஜயகாந்த் மகன்!

nathan

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த “எருமசாணி” விஜய்.! வீடியோ.!

nathan

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் 5 பழக்கங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan