32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து -மருத்துவ உலகில் புதிய புரட்சி

nathan

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

nathan

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

nathan

கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கரு-க்கலைப்பு

nathan

இலங்கையில் சகோதரிகளின் அதிர்ச்சிகரமான செயல்

nathan

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்…துவக்கி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்

nathan

CHANDRAYAAN 3 வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்!

nathan

போடா ப்ரோமோ பொறுக்கி – விஷ்ணுவை வெளுத்து வாங்கிய தினேஷ்.

nathan

பீகாரில் தலித் இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!!

nathan