28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

புதிய அவதாரம் எடுக்கும் டாடா நானோ கார்

nathan

ஐசியூவில் நடிகை மகாலெட்சுமி கணவர் –

nathan

.ஷிவானி நாராயணன் ஆயுத பூஜை ஸ்பெஷல்

nathan

அந்த ஆடையில் குளியலறை காட்சி!! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படம்

nathan

வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

nathan

வீட்டைவிட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி கோபி… தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

nathan

இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.. மிரண்டுபோன போலீஸ்

nathan

இந்த 4 ராசிக்காரங்க காதலில் துரோகம் செய்ய கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்களாம்…

nathan