father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

தினமும் இந்த பொருளை 1 ஸ்பூன் சாப்பிடுங்க..

nathan

சனி மற்றும் சுக்கிரன் தரும் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள்

nathan

சைக்கோ கணவர் -ரூ.10 லட்சம் தந்த பின்பே தாம்பத்யம்

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு சிங்கிளாக இருக்கும் வாழ்க்கைதான் சொர்க்கமாம்…

nathan

இந்த ராசிக்காரர்களை காதல் உறவில் நடுத்தெருவில் தான் நிற்கனுமாம்..!!

nathan

அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா..

nathan

YOUTUBER இர்பானின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் மீண்டும் வைரல்

nathan

பூர்ணிமா காதலை போட்டுடைத்த அர்ச்சனா…

nathan

ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டன!ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

nathan