father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

nathan

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ

nathan

.“பலருடன் உறவு”..ரூமில் வினோதினி நடத்திய “ஆபரேஷன்”

nathan

கியூட்டாக நடனமாடிய குக் வித் கோமாளி ரவீனா

nathan

கணவருடன் விடுமுறையை கொண்டாடிய சீரியல் நடிகை பிரியங்கா

nathan

நடிகர் கவின் திருமணத்தின் பின் மனம் திறந்த லாஸ்லியா!

nathan

ரஷியா அதிபர் விடுத்த எச்சரிக்கை! அணு ஆயுதத்தை எப்போது பயன்படுத்துவோம் தெரியுமா?

nathan

பெற்றோர்களின் கவனத்திற்கு! எந்த வயதிலிருந்து குழந்தைக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம்?…

nathan

சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

nathan