27.1 C
Chennai
Saturday, May 24, 2025
21 619cba
அழகு குறிப்புகள்

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர்.

18 வயதான யுவதி இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியதுடன் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இப்பாதக செயலை செய்ய முயன்ற இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்ய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன் , அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related posts

இதை நீங்களே பாருங்க.! அந்த இடத்தில் குத்திய டாட்டூ அப்பட்டமாக தெரிய புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை

nathan

சூப்பர் டிப்ஸ்.. புருவம் அடர்த்தியாக வளர இயற்கை வழிகள்

nathan

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

nathan

மகாத்மா காந்தி குறித்து கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

nathan

முகத்திற்கு பேஸ்பேக்

nathan