23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 619cba
அழகு குறிப்புகள்

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர்.

18 வயதான யுவதி இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியதுடன் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இப்பாதக செயலை செய்ய முயன்ற இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்ய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன் , அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related posts

கின்னஸ் சாதனை – இஸ்ரேலில் விளைந்த உலகின் பெரிய ஸ்ட்ராபெர்ரி பழம்

nathan

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? நீங்களே பாருங்க.!

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

ராதிகா – சரத்குமார் – வரலட்சுமி – புதிய சர்ச்சை! வெளிவந்த தகவல் !

nathan

எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….

sangika

அடேங்கப்பா! பிக்பாஸ் அனிதா சம்பத்க்கு அடித்த அதிர்ஷ்டம்

nathan

சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

அடேங்கப்பா! குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி..!

nathan