6c7ad16
அழகு குறிப்புகள்

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த 3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இளம் தாய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் திகதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தில் நடந்தது.

நிக்கோலா ப்ரீஸ்ட் (Nicola Priest) எனும் 23 வயது இளம் பெண் தனது 3 வயது மகள் கெய்லி-ஜெய்டே யுடன் (Kaylee-Jayde) Solihull-ல் உள்ள Kingshurst House குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

நிக்கோலா, கால்லம் ரெட்ஃபெர்ன் (Callum Redfern) எனும் 22 வயது இளைஞனை காதலித்து வந்தார். கால்லம் பெரும்பாலும் நிக்கோலாவின் வீட்டில் இருப்பது வழக்கமாக இருந்தது.

 

இந்த நிலையில், 2020-ல் ஆகஸ்ட் 9-ஆம் திகதி நிக்கோலா தனது காதலனுடன் உறவில் இருந்தபோது, குழந்தை கெய்லி அறியாமல் அந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஆத்திரம் அடைந்த இருவரும், தங்கள் உறவுக்கு மிகவும் இடையூறாக இருந்துவரும் கெய்லியை மிகக் கடுமையாக அடித்து அங்கேயே கொலை செய்தனர். கெய்லியின் நெஞ்சிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் குழந்தை துடுதுடித்து இறந்துவிட்டது.bfd15

 

சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதம் கழித்து, நிக்கோலா தனது டிக்-டொக் பக்கத்தில் “நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன், நான் அப்படி செய்திருக்கக்கூடாது, அதே நேரத்தில் நான் வேறு எதையாவது செய்திருக்க வேண்டும்” என நடந்தவற்றை மறைமுகமாக வெளிப்படுத்தி தனது தாயிடம் மன்னிப்பு கேட்பது போல ஒரு விடியோவை வெளியிட்டார்.

பின்னர் விடயம் வெளியே தெரியவந்ததும், பொலிஸார் நிக்கோலா மற்றும் அவரது காதலன் கால்லம் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தது.

 

விசாரணையின் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இருவரும் சேர்ந்து தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்பது உறுதியானது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நிக்கோலாவுக்கு 15 ஆண்டுகள் சிறையும், அவரது காதலனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பிர்மிங்காம் கிரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

சன் டேன் எனும் கருமையை நீக்க கற்றாழை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

nathan

டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார்

nathan

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிட்டால் போதும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan