a9e360f701444295
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகள் புண் விரைவில் ஆற வேண்டுமா? சூப்பரா பலன் தரும்!!

சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும்.

இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், கிருமி பெருகவும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.

அந்தவகையில் தற்போது இப்படி ஏற்படும் கால் புண்ணில் இருந்து விடுதலை பெற என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

டிப்ஸ் 1

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் ஆற ஆவாரம்பூ இலை மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதாவது நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ஆவாரம்பூ இலை பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு மேஜை கரண்டி நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ இலையின் பொடியை சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தவும். பின் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.

பின் இந்த கலவையை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.

பின் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சர்க்கரை நோய் புண்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 2

நீர்முள்ளி செடியின் இலை மற்றும் விதையினை பறித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இவற்றை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்.

புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை வெந்நீரால் சுத்தமாக கழுவி, சுத்தமாக துடைத்து கொள்ளவும். பின் மடித்து வைத்து காட்டன் துணியை புண்களின் மீது வைத்து நன்றாக கட்டவும். பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர சர்க்கரை நோய் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

 

Related posts

சுவர்களை அழகாக வைத்துக் கொள்ள என்ன வழி?

nathan

நீரிழிவு என்றாலே பயமா? இதோ அற்புதமான எளிய தீர்வு: இந்த டீயை மட்டும் குடிங்க!

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan

தெரிந்துகொள்வோமா? நீங்க தலைவலியால அதிகம் அவஸ்தைப்படுறவங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

‘ரான்சம்’ இணையத் தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு துறையின் அசட்டையா ?

nathan

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

nathan

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

nathan