31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகள் புண் விரைவில் ஆற வேண்டுமா? சூப்பரா பலன் தரும்!!

சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும்.

இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், கிருமி பெருகவும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.

அந்தவகையில் தற்போது இப்படி ஏற்படும் கால் புண்ணில் இருந்து விடுதலை பெற என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

டிப்ஸ் 1

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் ஆற ஆவாரம்பூ இலை மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதாவது நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ஆவாரம்பூ இலை பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு மேஜை கரண்டி நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ இலையின் பொடியை சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தவும். பின் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.

பின் இந்த கலவையை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.

பின் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சர்க்கரை நோய் புண்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 2

நீர்முள்ளி செடியின் இலை மற்றும் விதையினை பறித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இவற்றை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்.

புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை வெந்நீரால் சுத்தமாக கழுவி, சுத்தமாக துடைத்து கொள்ளவும். பின் மடித்து வைத்து காட்டன் துணியை புண்களின் மீது வைத்து நன்றாக கட்டவும். பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர சர்க்கரை நோய் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

 

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா?

nathan

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ்…!

nathan

கவர்ச்சியைத் தாண்டிய அறிவியல்!

nathan

சோயா மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா?அப்ப இத படிங்க!

nathan

எப்போதெல்லாம் மனைவியிடம் ஸாரி சொல்லணும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகுந்த வலியுடன் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

nathan

தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?

nathan