28.1 C
Chennai
Wednesday, Aug 13, 2025
03 1509688703 15
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கரும்புள்ளிகளைப்போக்கி முகத்தை பொலிவாக்க‍ சில குறிப்புகள்

உங்கள் முகத்தில் விழுந்துள்ள‍ கரும் புள்ளிக ளால் உங்கள் முகம், பொலிவிழந்து கருத்து காணப்படுகிறதா? கவலையை விடுங்கள். கீழு ள்ள‍ குறிப்புக்களை பின்பற்றி, அதன்மூலம் இழ ந்த உங்கள் முகப்பொலிவினை மீண்டும் பெற் று , இந்த உலகிலேயே நீங்கள் தான் அழகு ராணி என்பதை நீங்கள் உணர்வது நிச்ச‍ யம்

முட்டை:

முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.

பப்பாளி:

பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட் களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளி யை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வே ண்டும்.

கடலை மாவு:

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை:

கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவி னால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை:

வேப்பிலையை நீரில்போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்த மான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம்:

சந்தனப்பொடியில், சிறிது மஞ்சள் தூளை சே ர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை:

பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக் கும்போது தடவி, காலையில் எழுந்து கழுவி னாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம்:

பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரை த்து, முகத்தில் தடவி கையால் மென்மை யாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய் து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட்:

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத்பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென் மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டினால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத் துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில்:

5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ்செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய் த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

Related posts

நீங்கள் கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க… ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்ப பாலைக் கொண்டு இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! !

nathan

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?தெரிந்துகொள்வோமா?

nathan

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

sangika

உங்க முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாக போக்க தினமும் செய்யுங்க…

nathan

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு தழும்பை நிரந்தரமாக போக்க இந்த ஒரு பொருள் போதும்.!

nathan