27 C
Chennai
Thursday, Mar 12, 2026
paru 2142402f
அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய

பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள். 15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.

வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள். நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின்  மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.

Related posts

அம்மாடியோவ் சிம்புவின் சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

nathan

இந்த எண்ணெய் தடவுங்க உங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா

nathan

மாகாபா-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பொண்ணு முன்னாடி இப்படியா பண்றது!

nathan

இதை இரவில் படுக்கப்போகும் முன், நம் கண்ணை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்து விடும்.

sangika

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan

நம்ப முடியலையே நீயா நானா கோபிநாத்தின் மகளா இது..? – இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே..?

nathan

தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள்

sangika

அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்’ –ரவீந்தர் போட்ட கட்டளை.

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika