அலங்காரம்மணப்பெண் அலங்காரம்

பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை

பட்டுச்சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல் ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் ரை கிளீனிற்கு தான் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

* மிகவும் மென்மையான உடலுக்கு உபயோகிக்கும் சோப்பையோ அல்லது மென்மையான துணிதுவைக்கும் சோப்புத்தூளையோ பட்டுச்சேலையை துவைப்பதற்கு உடயோகப்படுத்தலாம்.

* சுடுநீர் நனைக்கவோ, அலசவோ கூடாது. குளிர்ந்த நீரைக் தான் பயன்படுத்த வேண்டும்.

* அதே போல் பட்டு சேலையை ஊறவைத்துக் துவைக்கப்கூடாது, சோப்பை மிருதுவாகத்தடவி கைகளினால் மேன்மையாத் துவைக்க வேண்டும்.

*  துவைக்கும் போது சேலையை சுழற்றுவதோ இறுக்கமாக பிழிவதோ கூடாது.

* ப்ரஷ் போட்டு பட்டுசேலையை துவைக்க கூடாது.

* துவைத்து அலசிய உடனே சேலையை நிழலில் காயவைத்து விட வேண்டும். அலசிய பிறகு சேலையில் இருக்கும் நுரை வெளியேற்ற இறுக்கிப் பிழயக்கூடாது.

* எப்போது மிதமான சூட்டில் தான் பட்டுச்சேலையை இஸ்திரி செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறை இஸ்திரி போடும் பொழுதும் ஒரே மாதிரி மடிக்காமல் மடிப்பனது மாறி வருவது போல் மடித்தோமானால் மடிப்புகளில் புடவை கிழிந்து போவது தவிர்க்கப்படும்.

* சேலையில் கறையானது பட்ட உடனேயே காட்டன் துணி அல்லது பேப்பர் டவலை அந்த கறையின் மேல் வைத்து முடிந்த வரை ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு டிரை க்ளீனிற்குத் தருவது நல்லது.

Festival

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button