Other News

வெளிவந்த தகவல் ! விக்கியுடன் திருமணம் எப்போது? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு :

நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை மட்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுத்தார். இருவரும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சினிமாவில் சாதித்த பிறகுதான் திருமணம் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது திருமணம் குறித்து நடிகை நயன்தாரா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் கிடைக்காமல் போனது.

ஒரு வேளை தேசிய விருது கிடைக்காமல் போனால் அவரின் காதல் என்னவாகும் என்ற அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button