30 C
Chennai
Saturday, Mar 14, 2026
weight loss
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்திற்கு பின் பெண்கள் உடல் எடையை குறைக்க… என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

கர்ப்ப காலத்தின் பின் பெண்கள் உடல் எடை அதிகரிக்கிறார்கள். ஆனால் அதை உடனடியாக குறைத்தே ஆக வேண்டும் என்று ஆபத்தான முயற்சியில் இறங்குவது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும்.

அந்த நேரத்தில், பொறுமையாக உணவு கட்டுப்பாட்டை எடுத்துக்கொளவது சரியான விஷயமாகும்.

உணவில் மாற்றம் கொண்டுவர, நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும்.

அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உடலின் நீர்ப்பற்றாக் குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும்.

மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது.

அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டி விடும். இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்து விடும்.

தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு தான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம்.

Related posts

இரட்டைக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?

nathan

ரத்தச்சோகையைத் தீர்க்கும் முருங்கை இலைப் பொடி!

nathan

மூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே…

nathan

மூல நோய் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது!

nathan

மஞ்சள் நிறமாக பற்கள் மாற என்ன காரணம்?

nathan

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புத பழம்!

nathan