32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
முகப் பராமரிப்பு

உங்களுக்கு அழகான கண்கள் வேண்டுமா??

முகத்திற்கு அழகை கொடுக்கும் கண்களை பராமரிப்பது மிகவும் அவசியமே.

மேலும் இத்தகைய கண்களில் ஏற்படும் குறைகளை போக்கி அழகான கண்களை பெற உதவும் சில இயற்கை முறைகளைப் பற்றி பார்ப்போம்

குளிர்ந்த நீர்

கண்களை சுத்தம் செய்யும் பொழுது எப்பொழுதும் குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். மேலும் தினமும் அதிக நீர் அருந்துவதும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து கண் குறைபாடுகளை தடுக்கும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் ஒரு சிறு துணியினை கொண்டு நனைத்து அதனை சருமம், கண்கள், மற்றும் மூக்கில் தேய்த்தால் அங்குள்ள கருமை நிறம் போகும்.

 

பழங்கள் மற்றும் காய்கறிகள்

தினமும் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல சத்தான பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். மேலும் அதிகம் மடிக்கணினி, செல்போன், தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

செவ்வந்தி பூ

கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்க செவ்வந்தி பூவில் இருந்து தயாரிக்க படும் டீயை தினமும் அருந்தலாம் அல்லது அதனை நீருடன் கொதிக்க விட்டு குளிர்ந்த நிலைக்கு வந்ததும் கண்களிருக்கு பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.

 

உருளை கிழங்கு

உருளை கிழங்கை இரண்டாக நறுக்கி கண்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள். தினம் இரு முறை செய்வதனால் கண்களில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் தினம் வைக்க கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து, மன சோர்வை போக்கும். சாறு கண்களில் இறங்கும். இதனை 20 நிமிடங்களை வரை வைத்து கொள்ள வேண்டும். பின்னர் நீரினை கொண்டு கண்களை நன்கு கழுவ வேண்டும்.

Related posts

உங்களுக்கு எந்த குறையும் இல்லாத சருமம் வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு…

nathan

ஆரஞ்சு தோல் கொண்டு அழகை அதிகப்படுத்த ரகசிய குறிப்புகள்!!

nathan

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan