30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!

ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் கோழி முட்டையில் கொஞ்சம் சக்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக் கொண்டு பிறகு தலைக்கு கூறிற வேண்டும். இதனால் எண்ணெய்ப் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை புதினா சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் புசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முகம் வோடிக்குரு வராமல் வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லீற்றர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

Source :webdunia

Related posts

நீங்கள் வெள்ளையாவதற்கு இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!இதை படிங்க…

nathan

முகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

nathan

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சருமத்துக்கு ஏற்ற ஃபேஸ் வாஷை எப்படி வீட்லயே ரெடி பண்றது தெரியுமா?

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

இளமையூட்டும் கடலை மா

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

உங்கள் சருமம் வறண்டிருக்கா? இதோ பொலிவை தரும் ஓட்ஸ் ரெசிபிகள்!!

nathan