அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் பொதுவான காரணங்களாக, அதிகநேரம் Computer பார்ப்ப‍தும், அதிக நேரம் படிப்பதுமே. ஆக உங்கள் கண்களில் ஏற்பட்டுள்ள‍ வறட்சியை போக்கி கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.

eye2

1) ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2) புகை பிடிப்பதனை உடனே கைவிட வேண்டும்.

3) புகை பிடிப்பவர்களின் அருகில் கூட‌ நிற்க வேண்டாம்.

4) கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.

5) தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

6) டீ, காபி இவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

7) கண் சொட்டு மருந்துகளும் தகுந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

8) வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க, கறுப்பு கண்ணாடி அணிந்து கொள்ள‍ வேண்டும்.

9) கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.

10) ஒன்றையே உற்று பார்க்காமல், அடிக்கடி கண்களை சிமிட்ட பழகுங்கள். அதாவது கண்களை மூடி, திறக்க பழகுங்கள்.

11) கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

12) போதுமானளவு தூங்க வேண்டும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button