அலங்காரம்ஃபேஷன்

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தீபாவளி பண்டிகை ஷாப்பிங்…

இந்தியாவில் பண்டிகை நேர ஷாப்பிங் எனும் தீபாவளியின் போது மட்டுமே அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி ஷாப்பிங் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணி ஏற்பாடு செய்யப்படுகிறது. தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது விற்பனையாகின்றன. அதாவது ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள் என்றவாறு அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன.
MA18CITY DIWALI CROWD
எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் அணிவரிசை நீண்டு கொண்டே போகும்.

தீபாவளிக்கு ஏற்ற தயாரிப்பு பணிகள்:-

தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

ஓராண்டு தயாரிப்பு ஒரு சிலநாளில் விற்பனை:-

தீபாவளிக்கு என ஆடைகள், பட்டாசு மற்றும் உபயோகப்பொருட்கள் தயாரிப்பு என்பது ஓராண்டு அதிக வேலையாட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பின்னர் அதனை அந்தந்த பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப கடைகளுக்கு பிரித்தளித்து அதன் விற்பனையை கண்காணிப்பர். தீபாவளி நெருங்க நெருங்க தான் அதன் மவுசும், தெரியவரும். பட்டாசு என்பது அதிக பாதுகாப்புடன் நிறைய பணியாளர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனை தீபாவளிக்கு சில நாள் முன்பு வாங்கி மகிழும் போது தயாரிப்பாளர்களின் மகிழ்வும் வெளிப்படும்.

மின்னணு பொருட்களும் விலையுயர் ஆபரணங்களும்

தீபாவளி ஷாப்பிங்-யில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்-யில் இடம் பெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் என்பது ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தீபாவளி சமயத்தில் தான் அதிகளவில் இதன் விற்பனை அதிகரிக்கிறது எனலாம்.

பணப்பெருக்கமும் வாங்கும் தன்மை அதிகரிப்பும்:-

ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதனை அதிக மகிழ்ச்சி படுத்தும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும் இணைந்து விடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்துவிடுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button