30.8 C
Chennai
Monday, May 20, 2024
ayir
முகப் பராமரிப்பு

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

தயிர் எல்லா வீட்டு சமையலறையில் பலவிதத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இது சமையலுக்கு மட்டும் பயன்படாமல் அழகிற்கும் பல விதத்தில் கைகொடுப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதில் அதிகம் செறிந்துள்ள லக்டிக் அமிலம் பல விதமான சருமப் பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருகிறது.

இது சருமத்தை சூரியக் கதிர்களின் பாதிப்பில் இருந்து காப்பதுடன், கரும் புள்ளிகள் நிறம் மாறுவதுடன் இறந்த கலங்களை அகற்றி சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் ஆரோக்கியமாக பேணுகிறது.

அழகை மெருகூட்டுவதற்கு தயிரை எப்படிப் பயன்படுத்துவது?

1.சருமத்தின் நிறத்தினை அதிகப்படுத்துவதற்கு.
ஒரு தேக்கரண்டி தயிருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளிற்கு தடவி 30 நிமிடங்கள் விடவும். பின்பு மசாஜ் செய்தவாறு நீரினால் கழுவினால் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். இதனை 2 வாரத்திற்கு தினமும் செய்வதனால் பலன் கிடைக்கும்.

2.கரும் புள்ளிகளை நீக்குவதற்கு.
2 தேக்கரண்டி பவுடராக்கிய ஒரேஞ் தோலுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்களின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவை செய்து வந்தால் போதுமானது.

கரும்புள்ளிகள் மீது நேரடியாக பஞ்சினால் தயிரை பூசி 15 நிமிடங்களின் பின் க்நீரினால் கழுவவும். தினமும் 2 அல்லது 3 தடவைகள் செய்வதனால் கரும்புள்ளிகள் நீங்கும்.

3.சூரியக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கும்.
பாதி கப் தயிரில் பாதி தக்காளி எடுத்து பிளண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள்ன் பின்பு நீரினால் கழுவுவதனால் சூரியக் கதிர்களின் பாதிப்புக்கள் நீங்கும். வரத்திற்கு இரு தடவைகள் இந்த முறையைப் பின்பற்றினால் போதுமானது.

அல்லது சம அளவு தேனும் தயிரும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் செய்து வருவது சிறப்பானது.

4.உலர்ந்த சருமத்திற்கு.
சிறிய துண்டு வாழைப் பழத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனால் சருமம் ஈரலிப்பாக இருப்பதுடன், பளபளப்பாகவும் மாறுகிறது.

5.சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு.
3 தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி ஒலிவ், பாதாம் எண்ணெய் மற்றும் றோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பஞ்சினால் பூசவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவினால் போதுமானது. இதனை சருமம் பொலிவிழந்து போகும் நாட்களில் செய்வதனால் அழுக்குகள், இறந்த கலங்கள் நீங்கி பொலிவைப் பெற முடியும். ayir

Related posts

உங்களுக்கு பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan

உங்களுக்கு இந்த பரு போகணுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

ஆண்களே உங்களுக்கு முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..?இதை முயன்று பாருங்கள்…

nathan

மஞ்சள் ஃபேஷ் பேக் போடும் போது தவிர்க்க வேண்டியவை

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

nathan