36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

பிரகாசமாக முகம் வேண்டுமா? ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ முயன்று பாருங்கள்!!!

முகத்தை அழகாக, பிரகாசமாக வைக்க பல வகையான ஃபேஸ் பேக்குகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் சிறந்த ஒரு ஃபேஸ் பேக் என்று சொன்னால் அது வெள்ளரிக்காய் வைத்து செய்வது தான் என்று சொல்லலாம். ஏனென்றால் எந்த ஒரு ஃபேஸ் பேக் செய்தாலும், இறுதியில் வெள்ளரிக்காயை வைத்து அதை முடிக்கிறார்கள். அப்படி இருக்க இந்த வெள்ளரிக்காயை வைத்தே ஃபேஸ் பேக் செய்தால் எப்படி இருக்கும்?

ஏனெனில் வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது. இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. அத்தகைய வெள்ளரிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எப்படியெல்லாம் ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ செய்யலாம்?
1. வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

2. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 20-25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பிம்பிள் இருந்தால் அது மறைந்துவிடும்.

3. 4-5 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டை, தேன் மற்றும் எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து, புதினாவை அரைத்து அத்துடன் சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகமானது புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், இளமையோடும் காட்சியளிக்கும்.

4. வெள்ளரிக்காய் ஜூஸை 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 10-12 துளி ரோஸ் வாட்டரை க்ளேயுடன் சேர்த்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். நிறைய நேரம் ஊற வைத்து விட வேண்டாம், இல்லையென்றால் முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பிம்பிளை அகற்றும்.

5. வெள்ளரிக்காய், பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அதோடு சிறிது தேன் விட்டு கலந்து, முகத்தில் தடவி 20 25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் முகமானது மென்மையாகவும், முகத்தில் இருக்கும் அழுக்கும் அகன்று பொலிவோடு காணப்படும். இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியோடும் மின்னும்.

 

Related posts

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika

அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்…?

nathan

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

அழகு சிகிச்சை அபாயங்களும் ஆச்சரியங்களும்!

nathan

நெற்றியில் சொர சொரப்பை போக்கும் எளிய சிகிச்சை

nathan

25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

இரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்! சருமம் ஜொலிக்கும்

nathan