29.5 C
Chennai
Friday, Jun 28, 2024
Wat 12 18299
மருத்துவ குறிப்பு

இந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் இல்லை – திடுக் அறிக்கை!

கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) என்ற அறிக்கை கூறுகிறது. நாளை உலக தண்ணீர் தினம் பின்பற்றப்பட உள்ள நிலையில் இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் போதிய திட்டமின்மை, அதிகரிக்கும் தேவை, பெருகும் மக்கள் தொகை மற்றும் தண்ணீர் அதிகம் கோரும் விவசாயம் போன்ற காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த பற்றாக்குறை மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் காலரா, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கூடியுள்ளது என்ற அந்த அறிக்கை விளக்குகிறது.

உலகின் மிக வேகமாக பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா, அனைத்து மக்களுக்கும் தண்ணீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினம்தான் என்று அந்த அறிக்கை எடுத்துக் கூறுகிறது.

உலக அளவில், 66.3 கோடி பேருக்கு சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் அதில் 52.2 கோடி பேர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. Wat 12 18299

Related posts

உங்களுக்கு தெரியுமா கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்…

nathan

உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாயு தொல்லை காரணமா?

nathan

தசைப்பிடிப்பு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்….

nathan

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ!

nathan

கால்சியம் உடலுக்கு ரொம்ப அவசியம்!

nathan

சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்…! இத படிங்க!

nathan

நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan