27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
44444
மருத்துவ குறிப்பு

ரத்தச்சோகையைத் தீர்க்கும் முருங்கை இலைப் பொடி!

முருங்கை இலைப் பொடி

தேவையானவை: முருங்கை இலை – 1 கப், வெள்ளை எள்ளு, உளுத்தம் பருப்பு – தலா 1/4 கப், சிவப்பு மிளகாய் – 10, பூண்டு – 5 பற்கள், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

44444

செய்முறை: முருங்கை இலையைச் சுத்தம்செய்து, கழுவி நிழலிலே வெள்ளைத் துணியில் போட்டு உலர்த்த வேண்டும். வெயிலில் காயவைத்தால், பச்சை நிறம் நீங்கிவிடும். முருங்கை இலை மொறுமொறுப்பான பதத்துக்குக் காய்ந்த பின்னர், தவாவில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வெள்ளை எள்ளு, பூண்டு, புளி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், காய்ந்த முருங்கை இலையுடன் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடியாக அரைத்தால், முருங்கை இலைப் பொடி தயார். இட்லி பொடிக்குப் பதிலாக இதைத் தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்: இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எல்லோருக்கும் ஏற்றது. சருமத்துக்கு நல்லது. ரத்தச்சோகையைத் தீர்க்கும். கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட இந்தப் பொடியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Related posts

முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

எல்லாத்தையும் பக்காவா நியாபகம் வச்சுக்க இப்டி பண்லாமே தெரியுமா!

nathan

ஹெபடைடிஸ் பி வைரஸ் பற்றி கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்தும் அற்புதமான பழம்!!

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

nathan

40 வயதில் பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் எனென்ன?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!

nathan

காலையில் இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோயை தடுக்கலாம் என தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan