29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
2 31 1464690009
தலைமுடி சிகிச்சை

வேப்பிலை கூந்தலுக்கு செய்யும் அற்புதத்தை அறிவீர்களா?

வேப்பிலையின் வரலாறு மிகப் பழமையானது. ஆயுர்வேதத்திலும், அழகுக் குறிப்பிலும் இது மிக அருமையான பலன்களைத் தருகிறது.

ஆன்மீகத்திலும் வேப்பிலை ஆட்சி செய்கிறது. வேப்பிலையின் குணம் கசப்புதான். ஆனால் பலன் அற்புதங்கள்.அப்படிப்பட்ட வேப்பிலையை கூந்தலில் பொடுகிற்கென எவ்வாறு பயன்படுத்தலாம் என காண்போமா?

பொடுகினால் உண்டாகும் அரிப்பிற்கு வேப்பிலை நீர் : வேப்பிலை நீர் செய்வது எளிது. முதல் நாள் இரவில், ஒரு லிட்டர் நீரினை நன்றாக கொதிக்க வைத்து இறக்குங்கள். அதில் சுமார் 40 வேப்பிலைகளை போட்டு, மூடி வைத்து விடுங்கள்.

இரவு முழுவதும் விட்டுவிட்டு, மறுநாள் அந்த நீரினைக் கொண்டு தலையை அலசுங்கள். பொடுகினால் ஏற்படும் அரிப்பு, வறட்சி ஆகியவற்றை போக்கிவிடும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பொடுகு முழுவதும் போய்விடும்.

வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதால், தொற்றுக்களால் உண்டாகும் பிரச்சனைகளையும் போக்கி விடும்.

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் தெரபி : உங்களுக்கு மிருதுவான, மிளிரும் கூந்தலின் மேல் ஆசை இருக்கிறதா? அப்படியென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வேப்பிலை -20 தேங்காய் எண்ணெய் – 2 கப் விளக்கெண்ணெய் – கால் கப் எலுமிச்சை சாறி – 1 ஸ்பூன்.

தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் அடுப்பில் வையுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் வேப்பிலையை போடுங்கள். வேப்பிலையின் நிறம் சிவந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஆறியவுடன் வடிகட்டி, அதனுடன், எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதனை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை இந்த எண்ணெயை தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். மிருதுவான, போஷாக்கான கூந்தல் கிடைக்கும்.

வேப்பிலை யோகார்ட் மாஸ்க் : தேவையானவை : வெந்தயம் -2 டீ ஸ்பூன் வேப்பிலை – 40 யோகார்ட் – அரை கப் எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்

வெந்தயம் முடி வளர்ச்சியை தூண்டும். வேப்பிலை பொடுகினை கட்டுப்படுத்தும். யோகார்ட் முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வையுங்கள். பின் ஊறிய வெந்தயத்துடன், வேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் யோகார்ட் கலந்து, தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, தலையை அலசவும்.

2 31 1464690009

Related posts

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியைத் தூண்டணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

இளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்!!!

nathan

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா

nathan

பெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும்!….

nathan

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan