35.1 C
Chennai
Monday, Jul 14, 2025
fairskincove 13 1463115746
சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் பொலிவிழந்த சருமத்தை வெண்மையாக்க வேண்டுமா?

எங்களுக்கு நடிகையைப் போல எல்லாம் நிறம் வேண்டாம். அட்லீஸ்ட் முகத்தில் இந்த கருமை எல்லாம் போய் அழகான தோற்றம் வந்தால் போதும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள்.

இதற்காக கடையில் கிடைக்கும் க்ரீம்களை எல்லாம் போட்டு சருமத்தை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இப்போது அவை நல்ல ரிசல்ட் கொடுத்தாலும் பின்னாளில் பக்க விளைவுகளைத் தரும்.

சீக்கிரம் முகம் தொய்வடைந்து வயதான தோற்றத்தை தந்துவிடும்.ஆகவே உணவும் சரி, அழகு சாதனங்களும் சரி,எப்போதும் இயற்கையையே நாடுங்கள்.

இந்த மாசுபட்ட சூழ்நிலை,குளிக்கும் உப்பு நீர்,வெயில்,புற ஊதாக் கதிர்களின் தாக்கம் என எல்லாம் சேர்ந்து நம் சருமத்தை பாதித்து கருமையடையச் செய்கின்றன. முகத்தை என்ன செய்தாலும் பொலிவேயில்லாமல், கருமையடைந்து இருக்கிறதா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.செய்து பாருங்கள்.உங்கள் முகம் களையாகும் நேரம் வந்துவிட்டது.

நம் வீட்டு சமையலறையிலேயே நம்மை உலக அழகி ஆகும் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. சமைக்க முதலில் ஆரம்பிக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் தொடங்கி , கடைசியில் போடும் கருவேப்பிலை வரை எல்லாமே நம்மை அழகாக்கக் கூடியவைதான். இன்று அப்படிப்பட்ட மூன்று பொருட்களைக் கொண்டு நம் நிறத்தை எப்படி மாற்றலாம் என பார்ப்போம்.

தேவையானவை:

மஞ்சள் -1 டேபிள் ஸ்பூன் தக்காளி- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்

மஞ்சள்:

மஞ்சள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அகற்றுகிறது. தினமும் பூசி வர தேகத்தில் ஒரு மினுமினுப்பை உண்டாக்குவதை காணலாம். அதிகப்படியான எண்ணெயை போக்குகிறது. சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். ஆனால் கடையில் வாங்கும் மஞ்சள் பொடியை விட, நீங்களே மஞ்சள் கிழங்கு வாங்கி பொடித்து வைப்பது நல்லது. கடைகளில் வாங்கும் மஞ்சளில் கெமிக்கல் கலந்திருக்கும்.

தக்காளி:

தக்காளி கருமையைப் போக்கும்.சுருக்கங்களை நீக்கி, சருமத்தை மிருதுவாக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் தினமும் பூசி வந்தால் முகப்பருக்கள் வராமல் இருக்கும். நிறத்தைக் கூட்டும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை ஒரு இயற்கை ப்ளீச்சாகும். கழுத்துப் பகுதியில் ஏற்படும் விடாப்படியான கருமையைப் போக்கும்.

உபயோகப்படுத்தும் முறை :

மஞ்சளுடன், தக்காளிசாறு மற்றும் எலுமிச்சைச் சாற்றினை நன்றாக கலக்கவும். இப்போது இந்த பேஸ்டினை முகத்தில் தடவி, காய்ந்தபின் குளிந்த நீரில் கழுவவும். தினமும் இரவில் செய்து வர , கருமை நீங்கி, நிறம் மெருகேறி , சருமம் அழகாகும். ஒரே வாரத்தில் வித்யாசம் காண்பீர்கள்.பிறகென்ன நீங்களும் உலக அழகிதான்.
fairskincove 13 1463115746

Related posts

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!

nathan

பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்

nathan

0 வயது தாண்டிய பெண்களும் ஆண்களும் கூட எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிகிச்சை,, ஆன்ட்டி ஏஜிங்..

nathan

வெயிலில் செல்லும் போது சருமம் எரிகிறதா? இதோ அதைத் தடுக்க சில வழிகள்!

nathan