30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

பெண்களே! இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

] ரோமம் இல்லாத சருமம் தான் பெண்களின் அழகான பட்டுப் போன்ற சருமத்திற்கு காரணம். ஆனால் சில பெண்களுக்கு அசிங்கமாக ஆண்களைப் போல் மீசை வளர ஆரம்பிக்கும். இதற்கு ஹார்மோன்கள் தான் முக்கிய காரணம்.

இப்படி உதட்டிற்கு மேல் மீசை போல் வளரும் முடியை நீக்க பல பெண்களும் அழகு நிலையங்களுக்குச் சென்று ‘அப்பர் லிப்ஸ்’ செல்வதுண்டு. ஆனால் இப்படி ஒருமுறை இச்செயலை செய்ய ஆரம்பித்தால், பின் அதனை அடிக்கடி செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி அதிகரித்துவிடும்.

ஆனால் இயற்கை வழிகளை மேற்கொண்டால் அப்பிரச்சனை இருக்காது. இங்கு உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடலை மாவு மற்றும் மஞ்சள்

1 டீஸ்பூன் கடலை மாவுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து உதட்டின் மேல் தடவி நன்கு உலர வைத்து கழுவினால், உதட்டிற்கு மேல் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். இம்முறையை முகம் முழுவதும் கூட செய்யலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள் தூள்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் முகம் முழுவதும் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதன மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

சோள மாவு மற்றும் பால்

சோள மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து உதட்டின் மேல் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள்

முட்டையின் வெள்ளைக்கருவுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர்ந்ததும், கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

அரிசி மாவு மற்றும் தயிர்

அரிசி மாவு மற்றும் தயிர் கூட தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் அரிசி மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், உதட்டின் மேல் முடி வளர்வதைத் தடுக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா…?

nathan

கருவளையம் எளிதாக மறைக்கப்பட அற்புதமான வைத்திய முறை !!

nathan

உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

nathan

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

nathan

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

nathan

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் வழிகள்

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan