ஜோதிடத்தில், குரு பகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராசியில் உயர்ந்த பதவியில் இருப்பவர் அந்த ராசியின் அனைத்து சுகங்களையும் பெறுவார்.
அவர் வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்ற முடியும். அவரே செல்வம், செழிப்பு, கருவுறுதல் மற்றும் திருமண மகிழ்ச்சிக்குக் காரணம்.
இந்து நாட்காட்டியின்படி, குரு பகவான் மே 14 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைந்தார்.
இதனால், குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பொருள் மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும். அது என்னன்னு இந்த பதிவில் பார்ப்போம்.
மேஷ ராசி | குருபகவான் இடமாற்றத்தின் மூலம் உங்களுடைய புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
பல நிலை சொத்துக்கள் வாங்க வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு வழக்கு சம்பந்தம் இருந்தால் உங்களுக்கு வசப்படும். பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. |
ரிஷப ராசி | குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அமரப் போகின்றார்.
இது வரை இருந்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கண்டங்கள் இருந்தால் இம்மாதத்துடன் நீங்குமாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. |
மிதுன ராசி | குரு பகவானின் அதிர்ஷ்ட பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதுவரை இருந்த அனைத்து சிக்கலுக்கும் ஒரு முடிவு கிடைக்கப்போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. |