இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீநகர் விமானநிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட்விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.
விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்புசத்தம் கேட்டதாகவும் புகைமண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.