24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
self test breast cancer win SECVPF
பெண்கள் மருத்துவம்

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்

மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி.

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்
மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி. புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும்

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள்,

1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்
2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்
3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது
4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்
5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது
6. மார்பகங்களில் வலி இது

– போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

சுயபரிசோதனை

* 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

* குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் “மமோகிராம்’ (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

* குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
self test breast cancer win SECVPF

Related posts

முடிந்த வரை கருப்பையை அகற்றாதீர்கள் !!

nathan

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

nathan

கூடுதல் கொலஸ்ட்ராலால் அவதியுறும் பெண்கள்..

nathan

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்…

nathan

தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காயின் மகத்துவம்

nathan

கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை….

nathan

உங்களுக்கு தெரியுமா 7 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

nathan

கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை

nathan

சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.

nathan