32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பைத் தெளித்த பெண்கள்

nathan

வெளிவந்த தகவல் ! 22 வயதில் பிரபல நடிகரை ரகசியமாக காதலிக்கிறாரா சூப்பர் சிங்கர் பிரகதி..

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு எண்ணெய் சருமமா மேக்கப் போட்டவுடனே அழிஞ்சுருதா?

nathan

போலீஸ்காரருடன் ரொமாண்ட்டிக்..ஆடியோவால் பரபரப்பு!!

nathan

சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் நடிகைகள்

nathan

அக்காவை மிஞ்சும் அழகில் வனிதா மகள்.. புகைப்படங்கள்

nathan

சிக்கன் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்?

nathan

உதயநிதி – கிருத்திகாவா இது ?புகைப்படங்கள்

nathan